திருப்பூரில் மூடப்படாத குழியால் விபத்து: மினி லாரி ஓட்டுனர் பலி

திருப்பூர்: திருப்பூர் வெங்கமேடு பகுதியில் வாகனங்கள் செல்லக்கூடிய சாலையில் மின் வாரியத்துறை சார்பில் தோண்டப்பட்ட குழி மூடப்படாததால், மினி லாரி நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த டிரான்ஸ்பாரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்சாரம் தாக்கி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருப்பூர்: திருப்பூர் வெங்கமேடு பகுதியில் வாகனங்கள் செல்லக்கூடிய சாலையில் மின் வாரியத்துறை சார்பில் தோண்டப்பட்ட குழி மூடப்படாததால், மினி லாரி நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த டிரான்ஸ்பாரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்சாரம் தாக்கி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார்.



போயம்பாளையத்தை அடுத்த வெங்கமேடு முதல் கங்காநகர் பகுதி வரை சாலையின் நடுவே மின்சார கேபிள் அமைப்பதற்கு சாலை நெடுகிலும் குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாகியும் தோண்டப்பட்ட குழி மூடப்படாததால் சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக இருந்தது.

சாலையில் மின்சார கேபிள் அமைப்பதற்கு தோண்டப்பட்ட குழி உடனடியாக மூட வேண்டும் என்றுஅப்பகுதி மக்கள் மின்வாரியத் துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழலில், அப்பகுதியில் மினி லாரி ஒன்று அந்த குழியில் நிலைதடுமாறி அருகில் இருந்த மின்மாற்றியில் மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாரத் கட்டாரி என்ற ஓட்டுனர் பரிதாபமாக பலியானார்.



மேலும், மினி லாரிக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற சிவக்குமார் என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...