கடும் மூச்சு திணறலால் அவதிப்படும் கருணாநிதி: முதலமைச்சருடன் மு.க.ஸ்டாலின், அழகிரி சந்திப்பு

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தில் அவரை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க., மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்துள்ளனர்.


கடும் மூச்சு திணறலால் அவதிப்படும் கருணாநிதி: முதலமைச்சருடன் மு.க.ஸ்டாலின், அழகிரி சந்திப்பு

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தில் அவரை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க., மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்துள்ளனர்.

தி.மு.க., தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த மாதம் 28-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து 11-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "கருணாநிதியின் வயது முதிர்வு காரணமாக அவர் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சமாளிப்பது சவாலாக உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சைகளை அவர் உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மருத்துவ அறிக்கை காரணமாக தி.மு.க.வினர் கடும் வேதனை அடைந்தனர். மக்கள் மத்தியிலும் நேற்று மாலை முதல் பரபரப்பான மனநிலை காணப்படுகிறது.

இன்று கடும் மூச்சு திணறலால் அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள சூழலில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்துள்ளனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு நேரில் சென்ற ஸ்டாலின், அழகிரி, எம்.பி., கனிமொழி, முரசொலி செல்வம் மற்றும் பெரியசாமி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க., மூத்த நிர்வாகிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்தனர்.

இந்த பரப்பான சூழலில், தி.மு.க.,வினர் முதலமைச்சரை சந்தித்திருப்பது தமிழகத்தில் மேலும் பரப்பான சூழலை உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள் சில நிமிடங்களில்...

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...