கோவை குட்கா ஆலை உரிமையாளர் அமீத் ஜெயின் உள்பட 4 பேர் ஜாமீனில் விடுதலை

கோவை: கோவை குட்கா ஆலை வழக்கில் ஜாமீன்தாரர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகியதால், உரிமையாளர் அமீத் ஜெயின் உள்பட 4 பேர் நிபந்தனை ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.


கோவை: கோவை குட்கா ஆலை வழக்கில் ஜாமீன்தாரர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகியதால், உரிமையாளர் அமீத் ஜெயின் உள்பட 4 பேர் நிபந்தனை ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டனர். 

கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்ட குட்கா ஆலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆலையின் உரிமையாளர் அமீத் ஜெயின் உட்பட 4 பேர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றனர். இதையடுத்து, அவர்கள் 4 பேரின் சார்பில் ஜாமின்தாரர்கள் கோவை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

 

டெல்லியைச் சேர்ந்த ஆலை உரிமையாளரான அமீத் ஜெயின் சார்பில் இருவர் தலா ரூ. 2 லட்சத்திற்கும், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை வாகன போக்குவரத்து செய்த கோவையைச் சேர்ந்த வடிவேல் என்பவர் சார்பில் இருவர் தலா ரூ. 10,000-க்கும், புகையிலைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்த மதுரையைச் சேர்ந்த பிரவீன், ஸ்ரீனிவாச பெருமாள் ஆகிய இருவர் சார்பில் இருவர் தலா ரூ. 25,000-க்கும் ஜாமீன்தாரர்கள் கோவை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது, 4 பேரும் இரண்டு வாரத்திற்கு கோவை சூலூர் காவல் நிலையத்தில் காலை, மாலை என இரு நேரங்களில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பகுதியில் குட்கா தயாரிப்பு தொழிற்சாலை சட்ட விரோதமாக இயங்கி வந்ததை கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சட்டவிரோத ஆலையை நடத்தி வந்ததாகக் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் உட்பட 4 பேர் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...