கோவை: காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்துத் தொழிற்சங்கத்தை சார்ந்த ஆட்டோ ஒட்டுநனர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை எதிர்த்து கோஷமிட்டனர்.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் நம்மிடம் கூறுகையில், "நாடு முழுவதும் வாகனம் இயக்கும் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
விபத்து என்பது எதிர்பாராத விதமாக நடைபெறுவது. இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால் விபத்து நடந்தால் நேரடியாக ஒட்டுநனர் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அபராதமும் ஒட்டுனர்களே கட்ட நேரிடும். இது அவர்களின் குடும்பங்களை முற்றிலும் பாதிக்கும்.
மத்திய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆட்டோக்கள் இயங்கவில்லை." என்றார்.

கோவை மண்டல இருசக்கர வாகன தொழிலாளர்கள் நலச்சங்கம் தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்துத் தொழிற்சங்கத்தை சார்ந்த ஆட்டோ ஒட்டுநனர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை எதிர்த்து கோஷமிட்டனர்.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் நம்மிடம் கூறுகையில், "நாடு முழுவதும் வாகனம் இயக்கும் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
விபத்து என்பது எதிர்பாராத விதமாக நடைபெறுவது. இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால் விபத்து நடந்தால் நேரடியாக ஒட்டுநனர் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அபராதமும் ஒட்டுனர்களே கட்ட நேரிடும். இது அவர்களின் குடும்பங்களை முற்றிலும் பாதிக்கும்.
மத்திய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆட்டோக்கள் இயங்கவில்லை." என்றார்.

கோவை மண்டல இருசக்கர வாகன தொழிலாளர்கள் நலச்சங்கம் தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.