அன்னூர் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 மாணவர்கள் படுகாயம்

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கல்லூரி பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கல்லூரி பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேருந்து ஒன்று அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்தது.



பேருந்தில் சுமார் 20 கல்லூரி மாணவ-மாணவிகள் பயணித்த நிலையில், பேருந்தை கருப்பையா என்ற ஓட்டுனர் இயக்கினார். பேருந்து ஆத்திகுட்டை என்ற கிராமத்தின் வழியே சென்ற போது, ஒட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து விபத்தினை பார்த்த பொதுமக்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர்.



தொடர்ந்து, அங்கு நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று, காயமடைந்த மாணவர்களை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர், அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் ஸ்டேரிங் செயல்படாமல் நின்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...