கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கல்லூரி பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கல்லூரி பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேருந்து ஒன்று அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்தது.

பேருந்தில் சுமார் 20 கல்லூரி மாணவ-மாணவிகள் பயணித்த நிலையில், பேருந்தை கருப்பையா என்ற ஓட்டுனர் இயக்கினார். பேருந்து ஆத்திகுட்டை என்ற கிராமத்தின் வழியே சென்ற போது, ஒட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து விபத்தினை பார்த்த பொதுமக்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து, அங்கு நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று, காயமடைந்த மாணவர்களை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர், அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் ஸ்டேரிங் செயல்படாமல் நின்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.