கோவையில் 13 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கவில்லை: டெம்போ, வேன், டாக்சி ஒட்டுனர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு

கோவை: மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



கோவை: மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் ஆட்டோ, டெம்போ, வேன், டாக்சி உள்ளிட்ட வாகனங்களை இயக்குபவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

12 ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில், கோவையில் 13 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கவில்லை என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதேபோல டெம்போ, டாக்சி, மினி வேன், டூரிஸ்ட் வேன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனை உரிமையாளர்கள், தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் நம்மிடம் கூறுகையில், "கோவையில் 90 சதவீதம் 

மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மத்திய அரசின் போக்குவரத்து சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்." என்றார்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்களைச் சாராத, தனியார் நிறுவனங்களை சார்ந்த தொழிலாளர்கள் பங்குபெறவில்லை என்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள், கால் டாக்சிகள், பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...