தொண்டர்கள் குவிந்ததால் காவேரி மருத்துவமனை முன்பு போக்குவரத்து மாற்றம்

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் மருத்துவமனையின் முன்பு குவிந்து வருவதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.


சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் மருத்துவமனையின் முன்பு குவிந்து வருவதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 



திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. முக்கிய உடல் உறுப்புகளின் இயக்கத்தைப் பராமரிப்பது சவாலாக உள்ளது என்றும் கூறியுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு ஸ்டாலின், அன்பழகன் மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். 



மேலும், காவேரி மருத்துவமனையில் முன் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். ‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டநிலையில், ஏராளமானோர் அங்கு குவிந்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பாக போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இரவு முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...