நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சுற்று வட்டார பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக மசினக்குடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பகம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்று வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரங்கராஜன் (50) என்பவரை பிடித்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா விற்பனை செய்வதும். ஒரு கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

அதை பறிமுதல் செய்த போலீசார் ரங்கராஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சுற்று வட்டார பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக மசினக்குடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பகம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்று வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரங்கராஜன் (50) என்பவரை பிடித்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா விற்பனை செய்வதும். ஒரு கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

அதை பறிமுதல் செய்த போலீசார் ரங்கராஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.