முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

நீலகிரி: முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி சாலை ஓரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலகிரி: முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி சாலை ஓரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



நீலகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் முதுமலை சுற்றுவட்டார பகுதிகளான தெப்பக்காடு, மசினகுடி, சீகுர் மற்றும் பொக்காபுரம் போன்ற இடங்களில் வறண்டு காணப்பட்ட வன பகுதிகள் தற்போது பசுமைக்கு திரும்பி உள்ளது.

இதனால் சாலை ஓரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. யானை மற்றும் காட்டு மாடுகள் சாலை ஓரங்களில் மேய்ந்து வருகிறது. இதனால் அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



மேலும், அப்படி சாலை ஓரங்களில் இருக்கும் வன விலங்குகள் அருகில் சென்று செல்பி எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வனத்துறையினரின் அறிவிப்பை இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மதிக்காமல் வன விலங்குகள் அருகே சென்று ஆபத்தை உணராமல் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.



இதைத் தடுக்கும் வண்ணம் வனத் துறையினர் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...