கோவை: கரும்புக்கடை - நஞ்சுண்டாபுரம் இடையிலான இணைப்பு சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி குடியிருப்புவாசிகள் மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.
கோவை: கரும்புக்கடை - நஞ்சுண்டாபுரம் இடையிலான இணைப்பு சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி குடியிருப்புவாசிகள் மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.
ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரும்புக்கடை முதல் நஞ்சுண்டாபுரம் பகுதி வரை 6 கிலோ மீட்டர் தூரம் இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலை அமைப்பதால் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுமெனவும், அத்திட்டத்தை கைவிட கோரியும் சாரமேடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், சாரமேடு பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கிய நிலையில், ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முயற்சிக்கின்றனர். இதனால், 300 குடியிருப்புகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, உள்ள சாலைகளை மேம்படுத்தினாலே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். இல்லையெனில், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை தலைமை செயலகத்தில் ஒப்படைப்போம், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரும்புக்கடை முதல் நஞ்சுண்டாபுரம் பகுதி வரை 6 கிலோ மீட்டர் தூரம் இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலை அமைப்பதால் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுமெனவும், அத்திட்டத்தை கைவிட கோரியும் சாரமேடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், சாரமேடு பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கிய நிலையில், ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முயற்சிக்கின்றனர். இதனால், 300 குடியிருப்புகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, உள்ள சாலைகளை மேம்படுத்தினாலே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். இல்லையெனில், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை தலைமை செயலகத்தில் ஒப்படைப்போம், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.