கோவையில் நாளை 13 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்காது

கோவை: மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் நாளை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


கோவை: மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் நாளை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கள் இணைந்து நடத்தும் இந்த போராட்டத்தில் கோவை சார்பில் 12 தொழிற்சங்கள் பங்குபெறுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் சிம்ப்ளிசிட்டி-யிடம் கூறுகையில், "நாடு முழுவதும் வாகனம் இயக்கும் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். 

கோவை மாநகரில் 13 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. இவை அனைத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போக்குவரத்து சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால் வாகனங்களை இயக்கும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும்.

அதுமட்டுமல்ல விபத்து என்பது எதிர்பாராத விதமாக நடைபெறுவது. இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால் விபத்து நடந்தால் நேரடியாக ஒட்டுநனர் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது அவர்களின் குடும்பங்களை முற்றிலும் பாதிக்கும்.

மத்திய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை உயர்வைக் குறைக்க வேண்டும்." என்றார்.

ஆட்டோ ஓட்டுனர் ராமானுஜம் கூறுகையில், "கடந்த ஆண்டு 5000 ரூபாய் கட்டிய இன்சூரன்ஸ் கட்டணம் இந்தாண்டு 8500 ரூபாய். மூன்று சக்கர வாகனம் ஒட்டும் எங்களால் இதனை எப்படி கட்ட முடியும். தினசரி வருமானம் குறைந்து வரும் இந்த நேரத்தில் இது போன்ற விலை வாசி உயர்வுகளால் நாங்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்." என்றார்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கால் டாக்சி ஒட்டுனர்கள், லாரி ஒட்டுனர்கள் , தனியார் பேருந்து ஒட்டுனர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...