காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார். பிற்பகல் 2.20 மணி அளவில் விமானம் நிலையம் வந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் தனபால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
இதன் பின்னர் அங்கிருந்து நேராக காவேரி மருத்துவமனைக்கு அவர்கள் சென்றார். அங்கு, கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் எம்.பி., கனிமொழியிடம் கேட்டறிந்தார். குடியரசுத் தலைவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் உடன் சென்றனர். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனிடையே, கருணாநிதியின் சந்திப்பு குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது :- திரு. கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார். பிற்பகல் 2.20 மணி அளவில் விமானம் நிலையம் வந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் தனபால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
இதன் பின்னர் அங்கிருந்து நேராக காவேரி மருத்துவமனைக்கு அவர்கள் சென்றார். அங்கு, கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் எம்.பி., கனிமொழியிடம் கேட்டறிந்தார். குடியரசுத் தலைவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் உடன் சென்றனர். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனிடையே, கருணாநிதியின் சந்திப்பு குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது :- திரு. கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.