திருப்பூர் : தந்தையுடன் தகாத உறவை வைத்திருந்த பெண்ணை, பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் : தந்தையுடன் தகாத உறவை வைத்திருந்த பெண்ணை, பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி துரை. இவரது மனைவி ரத்தினம் மற்றும் மகன் அருண். கடந்த ஒரு வருடமாக துரை தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக ரங்கநாயகி என்ற பெண்ணுடன் அவருக்குத் தவறான தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை துரையை மகன் அருண் எச்சரித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல்நிலையத்தில் மனைவி ரத்தினமும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று விசாரணைக்காக வந்த ரங்கநாயகியை, திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் நின்றிருந்த அருண், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றார். ரங்கநாயகி போட்டக் கூச்சலையடுத்து, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அருணிடம் இருந்த அரிவாளைப் பிடுங்கி திருப்பூர் வடக்கு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். ரங்கநாயகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
