திருப்பூரில் கடன் தொல்லையால் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை



திருப்பூர்: திருப்பூர் அருகே கடன் தொல்லை காரணமாக விவசாயி தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தாராபுரம் அருகே உப்பாறு அணை செல்லும் சாலையில் கெத்தல்ரேவ் என்ற கிராமத்தில் முத்துசாமி என்பவர் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இவர், தனது தாய், தந்தை, மனைவி செல்வி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார். தமிழகத்தில் பருவ மழை அதிகளவு பெய்திருந்தாலும், உப்பாறு அணைக்கு நீர் வரத்து இல்லாததால், விவசாயம் மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளார். இதன் காரணமாக விவசாயத்திற்காகள மற்றும் சொந்த செலவுகளுக்கு ரூ. 25 லட்சம் வரையிலும் கடன் பெற்றுள்ளார். 



தொடர்ந்து கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால் தவித்து வந்த முத்துசாமி கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். வீட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக முத்துசாமியின் மனைவி செல்வி, அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்திற்குக் கூலி வேலைக்கும் சென்று வருகிறார். இந்நிலையில், கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த முத்துசாமி நேற்றிரவு தனது மகன் மாணிக்க சத்தியமூர்த்தி(4), மகள் ராஜலட்சுமி (11) இருவரையும் வீட்டினுள் தூக்கிட்டு கொலை செய்து விட்டு, பின்னர், தனது தாய் மயிலாத்தாளுடன்(70) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

காலை தூங்கி எழுந்து வெளியே வந்து பார்த்த முத்துசாமியின் தந்தை வேலுச்சாமி, தனது மனைவி, மகன், பேரக்குழந்தைகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, இவர் அளித்த தகவலின் பேரில் குண்டடம் போலீசார் உடல்களைக் கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்காகப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடன் மற்றும் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை சமபவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...