திருப்பூர்: திருப்பூரில் வாகன விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணவை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டியின் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் வாகன விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணவை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டியின் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பல்லடம் சாலையில் உள்ள தெற்கு வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். வீரபாண்டி பிரிவில் தொடங்கிய சைக்கிள் பேரணி தென்னம்பாளையம், எ.பி.டி. சாலை, மங்களம் சாலை வழியாக ஊத்துக்குளி சாலையில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் சாலையில் வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை, சாலைவிதிகளை மதிக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சைக்கிளில் பயணம் செய்தனர். இந்த சைக்கிள் பேரணியில் மருத்துவர்கள் முதல் சிறிய குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பல்லடம் சாலையில் உள்ள தெற்கு வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். வீரபாண்டி பிரிவில் தொடங்கிய சைக்கிள் பேரணி தென்னம்பாளையம், எ.பி.டி. சாலை, மங்களம் சாலை வழியாக ஊத்துக்குளி சாலையில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் சாலையில் வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை, சாலைவிதிகளை மதிக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சைக்கிளில் பயணம் செய்தனர். இந்த சைக்கிள் பேரணியில் மருத்துவர்கள் முதல் சிறிய குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.