திருப்பூர்: திருப்பூர் அருகே கட்டுமானப் பொருள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் அருகே கட்டுமானப் பொருள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சரவணா ரெடிமிக்ஸ் கான்கீரிட் லாரி, கான்கீரிட் கலவையை ஏற்றிக் கொண்டு முதலிபாளையம் பகுதியிலிருந்து வஞ்சிபாளையம் சாலைக்கு சென்று கொண்டிருந்தது. குமரேசன் (33) என்பவர் ஓட்டி வந்த இந்த லாரி, குமரன் சிலை பகுதியில் உள்ள வளைவைக் கடக்கும் போது, அதிக பாரத்தின் காரணமாக, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காலை நேரம் என்பதால் அதிகளவில் போக்குவரத்து இல்லை. எனவே, அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
