நீலகிரி: சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
நீலகிரி: சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் உதகை அரசு தாவரவியல் பூங்கா பசுமையாக காட்சியளிக்கிறது. இரண்டாவது சீசனுக்காக பூங்கா தயாராகி வருவதால் மலர்கள் இன்றி காணப்பட்டாலும், இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

மேலும், உதகையில் குளிருடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில், இன்று பெய்த சாரல் மழையில் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் அமர்ந்த சுற்றுலா பயணிகள் காலநிலையை வெகுவாக ரசித்தனர்.