திருப்பூர்: திருப்பூரில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து 33 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளை மட்டும் வீசியெறிந்துவிட்டு சென்றுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து 33 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளை மட்டும் வீசியெறிந்துவிட்டு சென்றுள்ளனர்.
பாண்டியன்நகர் பகுதியில் உள்ள திருநகர் 2-வது வீதியில் வசித்து வருபவர் ஜெகநாதன் (33). கடந்த நான்கு வருடங்களாக அந்த பகுதியில் வசித்து வருகிறார்.

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு நேற்று வெளியூரில் உள்ள கோவில் ஒன்றுக்கு குடும்பத்துடன் சென்றார் ஜெகநாதன். இன்று அதிகாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும், உள்ளே சென்று பார்த்த போது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 33 பவுன் நகை மற்றும் ரூ.50000 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. மேலும், அங்கிருந்த பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளை மட்டும் அலமாரியில் அப்படியே விட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இது தொடர்பாக, அனுப்பர்பாளையம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும், கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
