இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப் பதிவு

கோவை: கோவையில் அனுமதி இன்றி பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்தியதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 10 பேர் மீது குனியமுத்தூர் காவல் துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் அனுமதி இன்றி பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்தியதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 10 பேர் மீது குனியமுத்தூர் காவல் துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவையில் இந்து அமைப்பின் நிர்வாகி வீரகணேஷ் என்பவர் கடந்த 1989-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். குனியமுத்தூர் ஆத்துப்பாலம் மயானத்தில் உள்ள வீரகணேஷ் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் திதிகொடுக்கும் நிகழ்ச்சியும் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று நடத்தப்பட்டது.

இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி இந்து மக்கள் கட்சியினர் நேற்று அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினர்.

இதனை தொடர்ந்து, குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் குப்புராஜ் கொடுத்த புகாரின் பேரில், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 10 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அனுமதி இன்றி ஒன்று கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவிற்கு கீழ் படிய மறுத்தல் ஆகிய இரு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...