கோவை: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து இன்று தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.
கோவை: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து இன்று தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

தெற்கு ரயில்வே, மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் மற்றும் ஸ்ரீ ராமகிரஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், 120-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 'நமது மேட்டுப்பாளையம்' அமைப்பின் சமூக ஆர்வலர்கள், சச்சிதானந்தா பள்ளியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் வனவிலங்கு மீட்பு குழுவைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சரளாதன் மேற்பார்வையில் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு துய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ரயில்நிலையத்தின் வலதுபுறத்தில் இருந்த காய்ந்த மற்றும் அடர்ந்த புதர்களை அவர்கள் அப்புறப்படுத்தினர்.

முன்னதாக, தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு வளாகங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியம் பற்றி விளக்கப்பட்டது.

தெற்கு ரயில்வே, மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் மற்றும் ஸ்ரீ ராமகிரஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், 120-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 'நமது மேட்டுப்பாளையம்' அமைப்பின் சமூக ஆர்வலர்கள், சச்சிதானந்தா பள்ளியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் வனவிலங்கு மீட்பு குழுவைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சரளாதன் மேற்பார்வையில் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு துய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ரயில்நிலையத்தின் வலதுபுறத்தில் இருந்த காய்ந்த மற்றும் அடர்ந்த புதர்களை அவர்கள் அப்புறப்படுத்தினர்.

முன்னதாக, தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு வளாகங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியம் பற்றி விளக்கப்பட்டது.