நீலகிரி: நீலகிரியில் விதிகளை மீறி காட்டேஜ்களை நடத்தி வருபவர்கள் இந்த மாதம் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி: நீலகிரியில் விதிகளை மீறி காட்டேஜ்களை நடத்தி வருபவர்கள் இந்த மாதம் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:- நீலகிரியில் அதிகமான கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில், அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், பலர் வீட்டுமனை குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி பெற்று, அதனை காட்டேஜ்களாகப் பயன்படுத்தி வருவது களஆய்வின் போது தெரியவந்துள்ளது.
இதனை முறைப்படுத்த வீட்டுமனை குடியிருப்பு அனுமதி பெற்று காட்டேஜ் நடத்தும் அனைத்து உரிமையாளர்களும், வரும் 31-ம் தேதிக்குள் வீட்டுமனை குடியிருப்பு கட்டடங்களை, காட்டேஜ்களாக பயன்படுத்துவதற்கான திருத்திய திட்டத்தை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு, சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில், அனுமதியில்லா காட்டேஜ்களுக்கு செப்., 1 முதல் 'சீல்' வைக்கப்படும், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:- நீலகிரியில் அதிகமான கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில், அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், பலர் வீட்டுமனை குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி பெற்று, அதனை காட்டேஜ்களாகப் பயன்படுத்தி வருவது களஆய்வின் போது தெரியவந்துள்ளது.
இதனை முறைப்படுத்த வீட்டுமனை குடியிருப்பு அனுமதி பெற்று காட்டேஜ் நடத்தும் அனைத்து உரிமையாளர்களும், வரும் 31-ம் தேதிக்குள் வீட்டுமனை குடியிருப்பு கட்டடங்களை, காட்டேஜ்களாக பயன்படுத்துவதற்கான திருத்திய திட்டத்தை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு, சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில், அனுமதியில்லா காட்டேஜ்களுக்கு செப்., 1 முதல் 'சீல்' வைக்கப்படும், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.