கோவை: நீலம்பூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். மேலும், எட்டு பேர் படுகாயமடைந்தனர்.
கோவை: நீலம்பூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
சுந்தராபுரம் பகுதியில் கடந்த 1-ம் தேதி கார் மோதிய விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விபத்தின் தாக்கம் இன்னும் குறையாத நேரத்தில் தற்போது மீண்டும் கோவையில் மற்றொரு விபத்து ஏற்பட்டுள்ளது.

நீலம்பூர் புறவழிச்சாலையில், எதிர் எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த சிதம்பரநாத், கோகுல்நாத் மற்றும் இருகூரைச் சேர்ந்த கவுதம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.