வீட்டில் பிரசவம் பார்ப்பது குறித்து தகவல்களை தெரிவிக்க புகார் எண்ணை அறிவித்தது சுகாதாரத்துறை

கோவை: மருத்துவர்களின் துணையின்றி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தெரியவந்தால், அது தொடர்பாக தகவல் தெரிவிக்க புகார் எண்ணை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


கோவை: மருத்துவர்களின் துணையின்றி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தெரியவந்தால், அது தொடர்பாக தகவல் தெரிவிக்க புகார் எண்ணை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 



திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோ பார்த்து பிரசவம் பார்க்கப்பட்டதால், தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, தேனியிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 

எனவே, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என தமிழக அரசும் அறிவுறுத்தி வருகிறது. ஆனால், பழங்காலத்தில் வீட்டில் வைத்தே பெண்கள் எந்த பிரச்சினையும் இன்றி குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், இந்த காலத்திலும் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடியும் எனவும் பலர் இணையதளத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

மருத்துவர்கள் அல்லது செவிலியர்களின் துணையின்றி வீடியோ பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வீடியோ பார்த்தோ, திரைப்படங்களைப் பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எம்.பி.பி.எஸ்., மருத்துவர்கள், பயிற்சி பெற்ற செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்க்கத் தகுதி பெற்றவர்கள். 



பொதுமக்கள் அரசு மருத்துவமனையின் தாய் நல சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாய்சேய் நலனை காக்கும் கடமையை நிறைவேற்ற விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். 

வீட்டில் பிரசவம் பார்ப்பது தெரியவந்தால் பொதுமக்கள் 102, 104 ஆகிய எண்கள் மூலம் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் அளிக்கலாம். 044-24350496/24334811 மற்றும் 9444340496 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...