குழந்தைகள் குப்பைகள் போட்டதால் தந்தையை தாக்கிய அலுவலர்கள்: நடவடிக்கை எடுக்கக்கோரி பேருந்து முன்பு தர்ணா

திருப்பூர்: பேருந்து முன்பதிவு அலுவலகத்தில் குழந்தைகள் குப்பைகள் போட்டதால், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய அலுவலர்களைக் கண்டித்து படுகாயமடைந்த தந்தை பேருந்து முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.


திருப்பூர்: பேருந்து முன்பதிவு அலுவலகத்தில் குழந்தைகள் குப்பைகள் போட்டதால், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய அலுவலர்களைக் கண்டித்து படுகாயமடைந்த தந்தை பேருந்து முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். 

திருப்பூரைச் சேர்ந்த வள்ளிகணேசன் சென்னையில் உள்ள தனது உறவினர் இல்ல விஷேசத்திற்கு செல்வதற்காக நேற்றிரவு 'பாரத் டிராவல்ஸ்' என்கிற தனியார் ஏஜென்சி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அதற்காகப் பேருந்து நிறுத்தம் சென்ற அவர், பேருந்து தாமதமானதால் டிக்கெட் முன்பதிவு செய்த அலுவலகத்தில் காத்திருந்தார். 



அப்போது, அவருடன் இருந்த அவரது குழந்தைகள் சாக்லெட் சாப்பிட்டு விட்டு காகிதங்களை ஆங்காங்கே வீசியதோடு அலுவலகத்தின் சுவர்களையும் கரையாக்கியுள்ளனர்.

இதனைக் கண்ட அலுவலக மேலாளர் மற்றும் ஊழியர்கள் வள்ளி கணேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கவும் செய்துள்ளனர். 

இதனால், ஆத்திரமடைந்த வள்ளிகணேசன் சென்னை செல்ல இருந்த தனியார் பேருந்தை முற்றுகையிட்டு குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வள்ளி கணேசனிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு, அவரை சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் திருப்பூர் - அவிநாசி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...