48 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் நாளை திறப்பு : அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

கோவை: தொடர் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக நாளை முதல் திறக்கப்படுகிறது.

கோவை: தொடர் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக நாளை முதல் திறக்கப்படுகிறது. 

தென்மேற்குப் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மேலும், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய ஒன்றாகத் திகழும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி முதல் 17 நாட்கள் பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், 21-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. 

இருப்பினும், கோவை குற்றால அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் மீண்டும் கோவை குற்றாலம் அடைக்கப்பட்டது. பின்னர், அவ்வப்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறையும் போது அருவியை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்படுவதும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அருவி மூடப்படுவதுமாக இருந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழையின் அளவு குறைந்ததால், அருவியில் தண்ணீர் கொட்டுவதும் குறைந்துள்ளது. எனவே, வனத்துறையினரின் அனுமதியுடன் 48 நாட்களுக்குப் பிறகு நாளை முதல் கோவை குற்றாலம் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை தினம் என்பதால் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...