ஆடிப்பெருக்கு : பேரூர் படித்துறையில் வீசப்பட்ட குப்பைகளை அகற்றிய தன்னார்வலர்கள்

கோவை: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்துவிட்டு பேரூர் படித்துறையில் வீசியெறிந்த குப்பைகளை தன்னார்வலர்கள் அகற்றினர்.

கோவை: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்துவிட்டு பேரூர் படித்துறையில் வீசியெறிந்த குப்பைகளை தன்னார்வலர்கள் அகற்றினர்.



ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பேரூர் படித்துறை வழியே பாயும் நொய்யல் ஆற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், அவர்களை வணங்கவும் திரண்டனர்.

இதன் காரணமாக ஆற்றில் சுமார் 2 டன் அளவுள்ள

பிளாஸ்டிக் பொருட்கள் வீசப்பட்டது.



இந்த சூழலில், குப்பைகளை அகற்றும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் களமிறங்கினர்.

முன்னதாக, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்களை நீர்நிலைகளில் போடவேண்டாம் எனவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எடுத்துரைத்தனர்.



தன்னார்வலர்களின் இந்த தன்னலமற்ற சேவையால், ஆண்டுதோறும் இத்தினத்தில் மாசுபடும் நொய்யலும், பேரூர் படித்துறையும் பொலிவு பெற்றது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...