திருப்பூர்: திருப்பூரில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கேரிபாளையம் பகுதியில் ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு வந்த மர்மநபர் ஒருவர் நீண்ட நேரமாக சந்தேகப்படும் வகையில் ஏ.டி.எம்., இயந்திரத்தை இயக்கிப் பார்த்துள்ளார். இதன் காரணமாக ஏ.டி.எம்., இயந்திரத்தின் ஆபத்து சமிக்ஞை மும்பையிலுள்ள அலுவலகத்திற்கு சென்றுள்ளது. எச்சரிக்கையான வங்கி ஊழியர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள்ளாகவே அந்த மர்மநபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். விசாரணையில் ஏ.டி.எம்., இயந்திரம் ஏற்கனவே பழுதானதும், அதில் பணம் எதுவும் இல்லை என்றும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கேரிபாளையம் பகுதியில் ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு வந்த மர்மநபர் ஒருவர் நீண்ட நேரமாக சந்தேகப்படும் வகையில் ஏ.டி.எம்., இயந்திரத்தை இயக்கிப் பார்த்துள்ளார். இதன் காரணமாக ஏ.டி.எம்., இயந்திரத்தின் ஆபத்து சமிக்ஞை மும்பையிலுள்ள அலுவலகத்திற்கு சென்றுள்ளது. எச்சரிக்கையான வங்கி ஊழியர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள்ளாகவே அந்த மர்மநபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். விசாரணையில் ஏ.டி.எம்., இயந்திரம் ஏற்கனவே பழுதானதும், அதில் பணம் எதுவும் இல்லை என்றும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.