வாகன ஓட்டிகளின் ஹுரோவாக மாறிய போக்குவரத்து காவலர் : குண்டும் குழியுமான சாலைகளை சமன் செய்த பணிக்கு வரவேற்பு

திருப்பூர் : குண்டும், குழியுமாகக் காட்சியளித்த சாலைகளை, சக போலீசாரின் உதவியுடன் மண்ணை நிரப்பி சமன் செய்த திருப்பூர் போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை வாகன ஓட்டிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


திருப்பூர் : குண்டும், குழியுமாகக் காட்சியளித்த சாலைகளை, சக போலீசாரின் உதவியுடன் மண்ணை நிரப்பி சமன் செய்த திருப்பூர் போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை வாகன ஓட்டிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர் சாலை மேம்பாட்டுப் பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். இதில், பல்வேறு இடங்களில் சாலை பணிகள் சரிவர முடியாமலும், சாலைகள் பெயர்ந்த நிலையில் குண்டும் குழியுமாகவும் இருந்து வருகிறது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி விழுந்து விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 



இந்த நிலையில், மோசமான சாலைகளால் அடிக்கடி வாகன ஓட்டிகள் கீழே விழும் இடங்களைக் கண்டறிந்த திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவலர் பாண்டியராஜன், விபத்துகளை தடுக்கும் வகையில் வெள்ளியங்காடு பிரிவு, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் உள்ள குழிகளில் உடன் பணிபுரியும் காவலர்களின் உதவியுடன் மண்ணை நிரப்பி சாலைகளை சமன்படுத்தினார்.



போக்குவரத்து காவலர்கள் என்றாலே வாகன ஓட்டிகள் பயந்து ஓடும் நிலையில், நெடுஞ்சாலைத்துறையின் பணியை சிரமம் பாராமல் மண்ணை வரவழைத்து பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று சாலையை சமன்படுத்திய இவரின் நற்பணியானது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்ல, விபத்துகளைத் தடுப்பதும் காவலர் பணிதான் என்பதை உணர்த்தும் வகையிலும், அதனை மேற்கொள்ள இதுவும் ஒரு வழிதான் என பல காவலர்களுக்கு, போக்குவரத்து காவலர் பாண்டியராஜன் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...