கோவை: சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியதைக் கண்டித்து கோவையில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியதைக் கண்டித்து கோவையில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிலை கடத்தல் வழக்குகளை போலீஸ் விசாரணையில் இருந்து சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், கோவையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிலை கடத்தல் வழக்குகளை நீர்த்துப் போக செய்யும் வகையில் விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்து சமய அறநிலையைத் துறையினை கலைக்க ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட அமைப்புகள் சதி செய்து வருவதாகவும், சிலை கடத்தலில் கோவில் அர்ச்சகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறிய அவர்கள் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சிலை கடத்தல் வழக்குகளை போலீஸ் விசாரணையில் இருந்து சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், கோவையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிலை கடத்தல் வழக்குகளை நீர்த்துப் போக செய்யும் வகையில் விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்து சமய அறநிலையைத் துறையினை கலைக்க ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட அமைப்புகள் சதி செய்து வருவதாகவும், சிலை கடத்தலில் கோவில் அர்ச்சகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறிய அவர்கள் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.