மருத்துவம் இல்லாத பிரசவம் விளம்பர விவகாரம் : ஹுலர் பாஸ்கரின் நிஷ்டை மையத்திற்கு தற்காலிக தடை

கோவை : மருத்துவம் இல்லாத பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சி வழங்கப்படும் என்ற சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட ஹுலர் பாஸ்கரின் நிஷ்டை மையத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை : மருத்துவம் இல்லாத பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சி வழங்கப்படும் என்ற சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட ஹுலர் பாஸ்கரின் நிஷ்டை மையத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழங்கால முறைகளைப் போல் மருத்துவம் இல்லாமல், சமூக வலைதள வீடியோக்களை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த திருப்பூரைச் சேர்ந்த பெண் கிருத்திகா உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சியரங்கு வரும் 26-ம் தேதி நடைபெற இருப்பதாகக் கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த நிஷ்டை என்ற நிறுவனத்தின் தலைவர் ஹுலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியிருந்தார். 



பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இந்த விளம்பரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் ஹுலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மீது மோசடி செய்து பணம் பறிக்கும் முயற்சி மற்றும் குற்றம் செய்ய முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம் எனக் கூறி விளம்பரப்படுத்தி விட்டு ஆலோசனைக் கட்டணமாக தலா ரூ. 5,000 என பலரிடம் பாஸ்கர் பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஹுலர் பாஸ்கருக்குச் சொந்தமான கோவைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நிஷ்டை நிறுவனத்தை குனியமுத்தூர் போலீசார் தற்காலிகமாக மூடியுள்ளனர். மேலும், இந்த மையத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் கணேஷ் கூறுகையில், "சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வந்து விடக் கூடாது என்பதற்காக நிஷ்டை மையத்தை மூடக் கோரி அரசு (தாசில்தாருக்கு) அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது," என்றார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...