கோவையில் வாகன விபத்தில் சிக்கி பெண் தலைமை காவலர் உயிரிழப்பு

கோவை: அன்னூர் அருகே வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தலைமைக் காவலர் பாக்கியம் உயிரிழந்தார்.

கோவை: அன்னூர் அருகே வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தலைமைக் காவலர் பாக்கியம் உயிரிழந்தார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அன்னூர் காவல் நிலையத்தின் தலைமை காவலரான பாக்கியம் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

பணியினை முடித்து விட்டு மீண்டும் காவல் நிலையம் செல்ல மேட்டுப்பாளையம்-சத்தி சாலை வழியாக அறிவொளி நகர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். விபத்து தொடர்பாக, அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...