நவஇந்தியா சாலையில் குழாய் உடைப்பால் ஒருவார காலமாக வீணாகும் தண்ணீர் : அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

கோவை : நவஇந்தியா - ஆவாரம்பாளையம் சாலையில் நிலத்தின் அடியில் இருக்கும் குழாய் உடைந்து ஒருவாரமாகத் தண்ணீர் வெளியாகி வருவதால், அப்பகுதி குளம் போல காட்சியளிக்கிறது.

கோவை : நவஇந்தியா - ஆவாரம்பாளையம் சாலையில் நிலத்தின் அடியில் இருக்கும் குழாய் உடைந்து ஒருவாரமாகத் தண்ணீர் வெளியாகி வருவதால், அப்பகுதி குளம் போல காட்சியளிக்கிறது.



நவஇந்தியா - ஆவாரம்பாளையம் சாலையில் தனியார் கல்லூரிக்கு அருகே செல்லும் சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த சாலைகளுக்கு அடியில் தண்ணீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அங்கிருக்கும் குடியிருப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த சாலைக்கு அடியில் செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடித்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அச்சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த ஒரு வார காலமாகவே தண்ணீர் வீணாகிக் கொண்டு தான் இருக்கிறது. ஆவாரம்பாளையம் பகுதிக்கு தண்ணீர் திறக்கும் போது இந்த இடத்தில் தண்ணீர் வீணாகிறது. இது உப்புத் தண்ணீரா..? அல்லது குடிநீரா..? என்று தெரியவில்லை. எனினும், தண்ணீரை வீணாக்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.



ஒருவார காலமாக வீணாகும் தண்ணீர் குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...