காந்திபுரம், சிங்காநல்லுார், உக்கடம் பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் ஊட்ட தனி அறை

கோவை: சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் அக்னி மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து, மேட்டுப்பாளையம், காந்திபுரம், சிங்காநல்லுார், உக்கடம் பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் ஊட்ட தனி அறையை ஏற்படுத்தியுள்ளன.


கோவை: சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் அக்னி மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து, மேட்டுப்பாளையம், காந்திபுரம், சிங்காநல்லுார், உக்கடம் பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் ஊட்ட தனி அறையை ஏற்படுத்தியுள்ளன.



இது தொடர்பாக வெளியாகிய செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஒரே நேரத்தில் நான்கு தாய்மார்கள், தங்களது குழந்தைகளுக்கு பாலுாட்ட, வசதியாக அமர சொகுசான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாட பொம்மைகள், வெளிச்சம் தர விளக்குகள், பேன் போன்றவைகளும் இங்கு உள்ளன.



குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் ஊட்டுவது குழந்தைகளின் எளிதான செரிமானத்துக்கும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவும் என்பதை பெரும்பாலான தாய்மார்கள் அறிந்திருக்கவில்லை. பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்.

பெண்கள் மட்டுமன்றி, ஒவ்வொரு ஆண்களும் தாய்ப்பால் புகட்டுவதின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க வேண்டும். எங்களது முயற்சிக்கு வீ-லிட்டில் மற்றும் கோயம்புத்துார் பேரன்ட்டிங் நெட்வொர்க் குழுவும் உதவுகிறது. இதன் தொடக்க விழா, சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர காவல்துறை, சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் லட்சுமி தொடங்கி வைத்தார். கங்கா மருத்துவமனை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மைய டாக்டர்.சுமா நடராஜன், பயிற்சி உதவி கலெக்டர் ஸ்நேகா, மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் தாளாளர் ரோட்டரியன் லீமா மார்ட்டின் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...