ஆடிப்பெருக்கு : மேட்டுப்பாளையத்தில் தாலி மாற்றி சிறப்பு வழிபாடு செய்த தம்பதியினர்

கோவை: ஆடிப்பெருக்கினை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீராடி தாலி மாற்றிய புதுமண தம்பதிகள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

கோவை: ஆடிப்பெருக்கினை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீராடி தாலி மாற்றிய புதுமண தம்பதிகள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

ஆடிப்பெருக்கினை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனத்தில் சிறப்புயாக வேள்விகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய பூஜைகள் செய்து, படையலிட்டு வழிபாடு நடத்தினர்.



தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் இங்கு சிவன், நதி, மயானம் என ஒரு சேர அமைந்திருப்பதால் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலங்களில் இருந்தும் ஆடிப் பெருக்கின் போது தங்களது முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும், ஆடி மாதத்தில் இளம் வயதில் உயிரிழந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய ஆற்றங்கரையில் 7 கற்களை வைத்து படையலிட்டு கன்னி மாரி பூஜை செய்து வழிபட்டனர்.



மேலும், பவானி ஆற்றங்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுப் பண்டங்கள் பலகாரங்கள் ஆகியவற்றை வாழை இலையில் வைத்து பூஜை செய்து பின்னர் அவற்றை காகங்களுக்கு படைத்து வழிபட்டனர். 

அத்துடன் புதியதாக திருமணமான தம்பதியினர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தாலி மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. குடும்பத்துடன் வந்து புதுமண தம்பதிகள் பவானி ஆற்றில் புனித நீராடி வழிபாடு நடத்தி, கணவர் கையால் தாலி மாற்றிக்கொண்டனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...