கோவை: காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் வெளியே நடமாடவே பயமாக இருப்பதாகவும் நடிகை சுருதி தெரிவித்துள்ளார்.
கோவை: காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் வெளியே நடமாடவே பயமாக இருப்பதாகவும் நடிகை சுருதி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, இன்று கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காவல் துறையினர் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். விசாரணையின் போது காவல் துறை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கு புகார் அனுப்பியுள்ளேன். அந்த ஆணையங்களிடம் ஆதாரங்களைக் கொடுக்க உள்ளேன்.
அடையாளம் தெரியாத எண்களில் இருந்து பலர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னை கடத்தி கற்பழித்து விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். தொடர் மிரட்டல்களால் வெளியே நடமாட பயமாக உள்ளது. லண்டனில் படிக்க செலுத்திய ரூ.23 லட்சம் பணத்தை முடக்க காவல் துறையினர் முயற்சிக்கின்றனர். இந்த வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்." என்றார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, இன்று கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காவல் துறையினர் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். விசாரணையின் போது காவல் துறை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கு புகார் அனுப்பியுள்ளேன். அந்த ஆணையங்களிடம் ஆதாரங்களைக் கொடுக்க உள்ளேன்.
அடையாளம் தெரியாத எண்களில் இருந்து பலர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னை கடத்தி கற்பழித்து விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். தொடர் மிரட்டல்களால் வெளியே நடமாட பயமாக உள்ளது. லண்டனில் படிக்க செலுத்திய ரூ.23 லட்சம் பணத்தை முடக்க காவல் துறையினர் முயற்சிக்கின்றனர். இந்த வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்." என்றார்.