'நடுக்காடு, யானை வரும் நேரம்., எப்படி தான் ஊர் போய் சேரப்போறோம்..!'- ஆனைகட்டியில் பழுதாகும் பேருந்துகளால் அச்சமடையும் மக்கள்

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை கிராமம் பகுதியில் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பதால். அப்பகுதி மக்கள், பழங்குடியினர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் அச்சத்துடன் நடந்தே தங்கள் கிரமங்களுக்குச் செல்லும் அவல நிலை நிலவி வருகிறது.

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை கிராமம் பகுதியில் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பதால். அப்பகுதி மக்கள், பழங்குடியினர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் அச்சத்துடன் நடந்தே தங்கள் கிரமங்களுக்குச் செல்லும் அவல நிலை நிலவி வருகிறது.



ஆனைகட்டி பகுதியைச் சுற்றி ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. எண்.24 வீரபாண்டி புதூர் என்கிற முகவரியின் கீழ் இங்கு 23 மலை கிராமங்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பில் பல ஆயிரம் மக்கள் ஆனைகட்டி பகுதியில் வசித்து வருகின்றனர்.

கோவை அரசுப் போக்குவரத்து கழகம், சார்பில் கோவை-ஆனைகட்டி பகுதிக்கு 8 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் - ஆனைகட்டி பகுதிக்கு துடியலூர் வழியாக 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், இருமாநில (தமிழக-கேரள) எல்லைப் பகுதி என்பதால் கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் கோழிக்கோடு பகுதியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் வழியாக இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரைமணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்கிற விதத்தில் பகல் நேரத்தில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனிடையே பெரும்பாலும் தரம் இல்லாத அரசுப் பேருந்துகள்தான் இயக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் பழங்குடியின மாணவர்கள், வேலைக்குச் செல்லும் மக்கள், பொருட்கள் வாங்க கீழே துடியலூர் வரும் பழங்குடியினர் என அனைத்துத் தரப்பும் மக்களும் தரமில்லாத பேருந்துகளால் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை), மதியம் கோவை - ஆனைகட்டிக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. முதலில் ஆலமர மேடு பகுதியில் நின்ற பேருந்தை, டிரைவர் மீண்டும் 'ஸ்டார்ட்' செய்து இயக்கியுள்ளார்.



அதன் பின் மூங்கில் பள்ளம் பகுதியில் பேருந்து மீண்டும் நின்றது. மூங்கில் பள்ளம் என்பது வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ளது. யானைகள், காட்டெருமைகள் என பல வன மிருகங்கள் நடமாடும் பகுதியாகும். அப்பகுதியில் நின்ற பேருந்தை, ஒட்டுநனரால் மீண்டும் இயக்க முடியவில்லை.

அதன் பின் அருகில் உள்ள கிரமத்திற்கு சிலர் நடந்தும், சிலர் அடுத்த பேருந்து வரும் வரை காத்திருந்தும் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பேருந்தில் பயணித்தவர்களில் ஒருவர் கூறுகையில், "யானை வர நேரம், எப்படி தான் ஊர் போய் சேர்வது?. இது இன்றுமட்டுமல்ல வாரத்துல பலநாள் இப்படி தான் பேருந்துகள் பழுதாகி நிற்கிறது. மிருகங்களுக்கு நடுவே நிற்கவும், நடக்கவும் பயமாக இருக்கிறது." என்றார்.

அப்பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலர் ஜோஸ்வா கூறுகையில், "வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் பேருந்து பழுதாகி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. தரமில்லாத அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது தான் இதற்குக் காரணம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அரசுப் பேருந்தை நம்பி ஏராளமானோர் இருக்கின்றனர். அரசு தரமான பேருந்தை இப்பகுதியில் இயக்க வேண்டும்." என்றார்.

 

இது குறித்து அரசுப் போக்குவரத்து கழகம் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மலை கிராமங்களில் பேருந்துகள் பழுதாகி நிற்காதவாறு தரமான பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. அப்படி நின்றாலும் கூட டிப்போவிலிருந்து உடனடியாக அதிகாரிகள் சென்று பேருந்தை சரி செய்கின்றனர்." என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...