கோவை: கோவையில் இரவில் வீடு புகுந்து முக மூடி கொள்ளையர்கள் பெண்களைத் தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் இரவில் வீடு புகுந்து முக மூடி கொள்ளையர்கள் பெண்களைத் தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த கருமத்தம்பட்டியில் முரளி என்பவரது வீட்டில் நேற்று இரவில் புகுந்த கொள்ளையர்கள், மனைவி பிரியலதா, மகள் ராகவி, அம்மா தங்கம்மா ஆகியோரைத் தாக்கி 7 பவுன் நகையைப் பறித்து சென்று விட்டனர். இதில் ராகவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார், அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் கடந்த மாதம் கோவை அடுத்த சூலூரில் தொடர் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து தற்போது புதிதாக வந்துள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான பாண்டியராஜன் அவர்கள் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் தொடர்ந்து கோவையில் இதுபோன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும், கோவை புறநகர் பகுதிகளில் அதிகமாக குற்றம் நடக்கும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்தப் பகுதியில் வாகன தணிக்கை மற்றும் கேமராக்கள் அமைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை அடுத்த கருமத்தம்பட்டியில் முரளி என்பவரது வீட்டில் நேற்று இரவில் புகுந்த கொள்ளையர்கள், மனைவி பிரியலதா, மகள் ராகவி, அம்மா தங்கம்மா ஆகியோரைத் தாக்கி 7 பவுன் நகையைப் பறித்து சென்று விட்டனர். இதில் ராகவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார், அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் கடந்த மாதம் கோவை அடுத்த சூலூரில் தொடர் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து தற்போது புதிதாக வந்துள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான பாண்டியராஜன் அவர்கள் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் தொடர்ந்து கோவையில் இதுபோன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும், கோவை புறநகர் பகுதிகளில் அதிகமாக குற்றம் நடக்கும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்தப் பகுதியில் வாகன தணிக்கை மற்றும் கேமராக்கள் அமைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.