கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு ஆறாக ஓடும் குடிநீர்

கோவை: கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு மழை வெள்ளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு மழை வெள்ளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.



கோவை காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு சிறுவாணி குடிநீரின் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. மேலும் இந்த குடிநீர் குழாயில் அவ்வப்போது லேசான விரிசல்கள் அல்லது உடைப்பு ஏற்பட்டு நீர் கசிவு ஏற்படும்.அதை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சரி செய்து விடுவார்கள். 



இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அந்த குடிநீர் குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. இதனால் காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு கடும் மழை பெய்தது போன்று சாலையெங்கும் நீர் வேகமாக பரவியது. இந்த நீரானது ரயில் நிலையம் வரை பரவியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் உடைந்த குழாய் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...