கோவை: கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு மழை வெள்ளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.
கோவை: கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு மழை வெள்ளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

கோவை காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு சிறுவாணி குடிநீரின் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. மேலும் இந்த குடிநீர் குழாயில் அவ்வப்போது லேசான விரிசல்கள் அல்லது உடைப்பு ஏற்பட்டு நீர் கசிவு ஏற்படும்.அதை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சரி செய்து விடுவார்கள்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அந்த குடிநீர் குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. இதனால் காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு கடும் மழை பெய்தது போன்று சாலையெங்கும் நீர் வேகமாக பரவியது. இந்த நீரானது ரயில் நிலையம் வரை பரவியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் உடைந்த குழாய் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
