கோவை: சுந்தராபுரம் அருகே 6 பேரை பலி கொண்ட சம்பவம் எதிரொலியாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநகர போலிசார் இரவு நேரத்திலும் அதிவேகம் மற்றும் மது குடித்து வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டாக தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: சுந்தராபுரம் அருகே 6 பேரை பலி கொண்ட சம்பவம் எதிரொலியாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநகர போலிசார் இரவு நேரத்திலும் அதிவேகம் மற்றும் மது குடித்து வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டாக தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுந்தராபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், அந்த காரின் ஓட்டுனர் ஜெகதீஸ் குமார் மீது போலீசார் மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் முதற்கட்டமாக 279, 337, 338, 304 (2) ஐ.பி.சி. என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பின்னர் தற்போது கூடுதலாக மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளான 183, 184, 185 ஆகிய மூன்று பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில், 185 என்பது மது அருந்தி அல்லது போதையினால் வாகனத்தை இயக்கியது என்ற பிரிவாகும்.

இந்த நிலையில், போலிசார் கோவையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது மதுபோதையில் வாகனத்தை ஓட்டுவது என சோதனை செய்து விதியை மீறி வரும் வாகனங்கள் மீது மற்றும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். சுந்தராபுரத்தில் நடந்த விபத்தை அடுத்து தற்போது கோவை மாநகர போலீஸார் தீவிரமான கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
