சுந்தராபுரம் விபத்து எதிரொலி; கோவை மாநகர போலீஸார் அதிரடி சோதனை

கோவை: சுந்தராபுரம் அருகே 6 பேரை பலி கொண்ட சம்பவம் எதிரொலியாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநகர போலிசார் இரவு நேரத்திலும் அதிவேகம் மற்றும் மது குடித்து வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டாக தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: சுந்தராபுரம் அருகே 6 பேரை பலி கொண்ட சம்பவம் எதிரொலியாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநகர போலிசார் இரவு நேரத்திலும் அதிவேகம் மற்றும் மது குடித்து வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டாக தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



சுந்தராபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், அந்த காரின் ஓட்டுனர் ஜெகதீஸ் குமார் மீது போலீசார் மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் முதற்கட்டமாக 279, 337, 338, 304 (2) ஐ.பி.சி. என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பின்னர் தற்போது கூடுதலாக மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளான 183, 184, 185 ஆகிய மூன்று பிரிவுகள்  இணைக்கப்பட்டுள்ளது. இதில், 185 என்பது மது அருந்தி அல்லது போதையினால் வாகனத்தை இயக்கியது என்ற பிரிவாகும்.



இந்த நிலையில், போலிசார் கோவையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது மதுபோதையில் வாகனத்தை ஓட்டுவது என சோதனை செய்து விதியை மீறி வரும் வாகனங்கள் மீது மற்றும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். சுந்தராபுரத்தில் நடந்த விபத்தை அடுத்து தற்போது கோவை மாநகர போலீஸார் தீவிரமான கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...