எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை: எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை முதல் சேலம் வரை எட்டுவழிச்சாலை அமைக்கும் வேலையைத் தமிழக அரசு ஈடுபட்டுள்ள நிலையில், எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை நடைபயணம் மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். 

இந்த நடைபயணத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்தது. இதனைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி.இராமமுர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எட்டுவழிச்சாலையா எடப்பாடிக்கு சாலையா, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்காது, கைது செய்தவர்களை விடுதலை செய், என முழக்கங்களை எழுப்பினர். 



முன்னதாக கோவை பீளமேடு பகுதியில் இருந்து ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் கட்சி கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...