கோவை: உலக மக்கள் நல்வாழ்வு அமைப்பு, போக்குவரத்து காவல்துறை மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை சமுகப்பணித்துறை இணைந்து சாலைப்பாதுகாப்பினை வலியுறுத்தி அவினாசிலிங்கம் பேருந்து நிலையத்தில் இன்று விழிப்புணர்வு செய்தனர்.
கோவை: உலக மக்கள் நல்வாழ்வு அமைப்பு, போக்குவரத்து காவல்துறை மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை சமுகப்பணித்துறை இணைந்து சாலைப்பாதுகாப்பினை வலியுறுத்தி அவினாசிலிங்கம் பேருந்து நிலையத்தில் இன்று விழிப்புணர்வு செய்தனர்.

இதில் முக்கியமாக தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது, இரண்டு பேர் மட்டும் பயணிப்பது, சாலை விதிகளை கடைபிடிப்பது, சரியான வேகத்தில் செல்வது குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் துறையின் உதவி ஆய்வாளர் கருணாகரன், உலக மக்கள் நல அமைப்பின் நிர்வாகி சுரேஷ்குமார் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் சமுகப்பணித்துறை தலைவர் முனைவர் அழகர்சாமி, சமுகப்பணித்துறையின் விரிவுரையாளர் கிருஷ்ணதாஸ், மாணவர்கள் ஆகியோர் விழிப்புணர்வு செய்தனர்.


இதில் முக்கியமாக தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது, இரண்டு பேர் மட்டும் பயணிப்பது, சாலை விதிகளை கடைபிடிப்பது, சரியான வேகத்தில் செல்வது குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் துறையின் உதவி ஆய்வாளர் கருணாகரன், உலக மக்கள் நல அமைப்பின் நிர்வாகி சுரேஷ்குமார் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் சமுகப்பணித்துறை தலைவர் முனைவர் அழகர்சாமி, சமுகப்பணித்துறையின் விரிவுரையாளர் கிருஷ்ணதாஸ், மாணவர்கள் ஆகியோர் விழிப்புணர்வு செய்தனர்.
