வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது பற்றிய பயிற்சியரங்கு: ஹீலர் பாஸ்கரிடம் போலீசார் விசாரணை!

திருப்பூரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் 26-ம் தேதி வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது குறித்த ஒருநாள் பயிற்சி என்ற விளம்பரம் வெளியாகியிருப்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் 26-ம் தேதி வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது குறித்த ஒருநாள் பயிற்சி என்ற விளம்பரம் வெளியாகியிருப்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் சமூக வலைதளத்தை பார்த்து பிரசவம் செய்தபோது திருப்பூரைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மருத்துவரின் தலையீடின்றி இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொண்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க ஆகஸ்ட் 26 ம் தேதி ஒரு நாள் பயிற்சி என கோவை புதூரை சேர்ந்த நிஷ்ட்டை என்ற அமைப்பு சர்ச்சைக்குரிய வகையில் விளம்பரம் வெளியிட்டிருந்தது. 

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த "நிஷ்டை" அமைப்பின் சுகப்பிரசவம் விளம்பரம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கினர். சுகாதாரத் துறை அதிகாரிகள் நிஷ்டை என்ற அமைப்பு குறித்து தகவல்களை சேகரித்ததோடு, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இந்த விளம்பரம் குறித்து கலந்தாலோசித்தனர். 

இதனையடுத்து, நிஷ்டை அமைப்பு மீது கோவை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி காவல்துறையில் புகாரளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நிஷ்டை அமைப்பைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கரிடம் விசாரணை நடந்துவருகிறது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...