கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தவிருந்த 1,000 கிலோ ரேசன் அரிசியை பொது விநியோக திட்டத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தவிருந்த 1,000 கிலோ ரேசன் அரிசியை பொது விநியோக திட்டத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பொது விநியோக திட்ட அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை ரயில்நிலையத்தில் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தப்படவிருந்த 1,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக பொது விநியோக திட்ட அதிகாரிகள் நம்மிடம் கூறுகையில், "தொடர் சோதனைகளால் கடந்த சில நாட்களாக ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடத்தல் சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது," என்றனர்.
ரயில்களில் தொடர்ந்து இது போன்ற ரேசன் பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில், இதில் அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் பொது விநியோக திட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பொது விநியோக திட்ட அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை ரயில்நிலையத்தில் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தப்படவிருந்த 1,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக பொது விநியோக திட்ட அதிகாரிகள் நம்மிடம் கூறுகையில், "தொடர் சோதனைகளால் கடந்த சில நாட்களாக ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடத்தல் சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது," என்றனர்.
ரயில்களில் தொடர்ந்து இது போன்ற ரேசன் பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில், இதில் அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் பொது விநியோக திட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.