கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தவிருந்த 1,000 கிலோ ரேசன் அரிசியை பொது விநியோக திட்டத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தவிருந்த 1,000 கிலோ ரேசன் அரிசியை பொது விநியோக திட்டத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பொது விநியோக திட்ட அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை ரயில்நிலையத்தில் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தப்படவிருந்த 1,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 



இது தொடர்பாக பொது விநியோக திட்ட அதிகாரிகள் நம்மிடம் கூறுகையில், "தொடர் சோதனைகளால் கடந்த சில நாட்களாக ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடத்தல் சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது," என்றனர். 

ரயில்களில் தொடர்ந்து இது போன்ற ரேசன் பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில், இதில் அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் பொது விநியோக திட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...