அவிநாசியை அடுத்த செங்காளிபாளையத்தில் சித்தார்த் என்ற 7 வயது சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (30). இவர் தனது வீட்டின் அருகிலேயே உள்ள விசைத்தறிக் கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிவா (9) மற்றும் சித்தார்த் (7) என இரண்டு மகன்களும் உள்ளனர்.


திருப்பூர்: செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (30). இவர் தனது வீட்டின் அருகிலேயே உள்ள விசைத்தறிக் கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிவா (9) மற்றும் சித்தார்த் (7) என இரண்டு மகன்களும் உள்ளனர். 

சிவா மற்றும் சித்தார்த் இருவரும் நல்லகவுண்டன் பாளையத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் இரண்டாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர். 

இந்நிலையில் அவர்களது தாய் இந்திராணிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேற்று இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை.

இதையடுத்து இருவரும் ஆளுக்கொரு புரமாக விளையாடிக் கொண்டிருந்தனர். மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த சாமிநாதன், சித்தார்த்தை காணவில்லை என தேடியுள்ளார். கட்டிடம் கட்டுவதற்காக பயன்படுத்தப்படும் பத்து அடி ஆழமுள்ள தரைமட்ட தொட்டிக்கு அருகே சித்தார்தின் செருப்பு கிடப்பதை கண்ட சாமிநாதன், பதற்றத்துடன் சென்று தொட்டிக்குள் குதித்து பார்த்த போது சித்தார்த் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...