திருப்பூர்: செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (30). இவர் தனது வீட்டின் அருகிலேயே உள்ள விசைத்தறிக் கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிவா (9) மற்றும் சித்தார்த் (7) என இரண்டு மகன்களும் உள்ளனர்.
திருப்பூர்: செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (30). இவர் தனது வீட்டின் அருகிலேயே உள்ள விசைத்தறிக் கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிவா (9) மற்றும் சித்தார்த் (7) என இரண்டு மகன்களும் உள்ளனர்.
சிவா மற்றும் சித்தார்த் இருவரும் நல்லகவுண்டன் பாளையத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் இரண்டாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களது தாய் இந்திராணிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேற்று இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை.
இதையடுத்து இருவரும் ஆளுக்கொரு புரமாக விளையாடிக் கொண்டிருந்தனர். மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த சாமிநாதன், சித்தார்த்தை காணவில்லை என தேடியுள்ளார். கட்டிடம் கட்டுவதற்காக பயன்படுத்தப்படும் பத்து அடி ஆழமுள்ள தரைமட்ட தொட்டிக்கு அருகே சித்தார்தின் செருப்பு கிடப்பதை கண்ட சாமிநாதன், பதற்றத்துடன் சென்று தொட்டிக்குள் குதித்து பார்த்த போது சித்தார்த் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.