மொத்தமாக பிளாஸ்டிக்கை தடைசெய்வது ஏற்றுமதி தொழிலையே அழிக்கும் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்

திருப்பூர்: வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதில் இருந்து அத்தியாவசிய பொருட்களான பால், எண்ணெய் மற்றும் மருந்து பொருட்களுக்கு மட்டும் விளக்கு அளிக்கப்படுகிறது.

திருப்பூர்: வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதில் இருந்து அத்தியாவசிய பொருட்களான பால், எண்ணெய் மற்றும் மருந்து பொருட்களுக்கு மட்டும் விளக்கு அளிக்கப்படுகிறது.

இந்த சூழலில், மற்ற அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் மொத்தமாக தடை செய்வது என்பது திருப்பூர் ஏற்றுமதி தொழிலையே அழித்துவிடும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறுகையில், "தடை செய்யப்பட பிளாஸ்டி பொருட்களில் பிளாஸ்டிக் பைகள், பேக்கிங் பைகள் இடம்பெற்றுள்ளது. ஏற்றுமதிக்காகவும், சில்லறை வணிகத்திற்கும் துணிகளை பிளாஸ்டிக் பைகளில் (பேக்கிங்) வைத்து தான் அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு பொதுவாக அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் பேக்கிங் மூலம் துணிகளை பாதுகாப்பது பாதிக்கப்படும். மேலும், நாங்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது.

எங்களிடம் இருந்து துணிகளை வாங்குவோரும், இது போன்ற பிளாஸ்டிக் பைகளில் துணிகளை பாதுகாப்பதையே விரும்புகின்றனர்." என்றார். 

இது தொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தமிழக முதலமைச்சருக்கு மனு ஒன்றை அளித்திருப்பதும், இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு விளக்கு அளிக்கக் கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...