கோவை: கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டார்.
கோவை: கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டார்.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருவேங்கடசாமி சாலையில் மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 1.20 கி.மீ நீளம் மற்றும் 21 மீ அகலம் கொண்ட மாதிரி சாலை அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருவேங்கடசாமி சாலை மற்றும் சர்.சண்முகம் சாலை சந்திப்பில் நவீன எந்திரம் மூலம் தார் தளம் அமைக்கும் பணியின் மாதிரி செயல் விளக்கம் இன்று நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப.காந்திமதி, மேற்கு மண்டல உதவி ஆணையர், மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து, வ.உ.சி மைதானத்தில் ரூ.12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் இயற்கை மரம் போன்ற தோற்றமளிக்கும் தங்க நிறத்திலான இலைகளைக் கொண்ட 'ஸ்மார்ட் ட்ரீ' மற்றும் வைஃபை வசதி உருவாக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்த 'ஸ்மார்ட் ட்ரீ'யில் சுமார் 30 பேர் அமரும் வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இலவச வைஃபை மற்றும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மின் இயந்திரங்களை சார்ஜ் செய்யும் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருவேங்கடசாமி சாலையில் மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 1.20 கி.மீ நீளம் மற்றும் 21 மீ அகலம் கொண்ட மாதிரி சாலை அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருவேங்கடசாமி சாலை மற்றும் சர்.சண்முகம் சாலை சந்திப்பில் நவீன எந்திரம் மூலம் தார் தளம் அமைக்கும் பணியின் மாதிரி செயல் விளக்கம் இன்று நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப.காந்திமதி, மேற்கு மண்டல உதவி ஆணையர், மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து, வ.உ.சி மைதானத்தில் ரூ.12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் இயற்கை மரம் போன்ற தோற்றமளிக்கும் தங்க நிறத்திலான இலைகளைக் கொண்ட 'ஸ்மார்ட் ட்ரீ' மற்றும் வைஃபை வசதி உருவாக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்த 'ஸ்மார்ட் ட்ரீ'யில் சுமார் 30 பேர் அமரும் வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இலவச வைஃபை மற்றும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மின் இயந்திரங்களை சார்ஜ் செய்யும் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.