கோவையில் துண்டுதுண்டாக கிடந்த பெண்ணின் உடல்: கால்கள் கண்டெடுப்பு

கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதே பெண்ணின் கால்கள் செல்வாம்பதி குளத்தில் இருந்து போலீசார் கண்டெடுத்துள்ளனர்.



கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதே பெண்ணின் கால்கள் செல்வாம்பதி குளத்தில் இருந்து போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

கோவை பனமரத்தூர் அருகே உள்ள செல்வாம்பதி குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தென்மேற்கு பருவ மழையின் காரணமாக குளம் முழுவதும் நிறைந்துள்ளது. இந்நிலையில் குளத்தின் ஓரத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி தலை, கைகள் மற்றும் வயிற்றின் கீழ் பகுதிகள் வெட்டப்பட்டு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார், நீரில் துண்டு துண்டாக மிதந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த உடலின் கால் பகுதிகள் மட்டும் கிடைக்காமல் இருந்தது.

இந்தநிலையில், அவற்றை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று குளத்தில் கிடந்த மற்றொரு மூட்டையில் இருந்து இரு கால்கள் மீட்கப்பட்டது.

பின்னர் அந்த கால்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சார்ந்தவர்? யார் அவரை கொலை செய்தது? என்பது குறித்து செல்வபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இறந்த பெண்ணின் காலில் இருந்த வளையங்கள் வடமாநில பெண்கள் அணியும் வகையிலானது என்பதால் கொலை செய்யப்பட்டு இறந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...