ஒரு டன் கலப்பட டீத்தூள் பறிமுதல், குடோனுக்கு சீல் : திருப்பூரில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி

திருப்பூர்: சாமுண்டிபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஒரு டன் கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர்.



திருப்பூர்: சாமுண்டிபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஒரு டன் கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர்.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலப்பட பொருட்களை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.



ஆய்வின் போது உணவுப்பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மற்றும் அதனை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் சாமுண்டிபுரம் மெயின் ரோடு பகுதியில் கலப்பட டீத்தூள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாமுண்டிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த முருகேசன்(45) என்பவர் டீ தூள் தயாரித்து பேக்கரி உள்ளிட்ட கடைகளுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

தொடர்ந்து அதிகாரிகள் அவரது குடோனுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர் டீத்தூளில் கலப்படம் செய்து குடோனில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் அளவு கொண்ட கலப்பட டீத்தூள் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.



மேலும், அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். பறிமுதல் செய்த டீத்தூள் பாக்கெட்களை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வறிக்கை வந்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...