கோவை: சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொது பங்கு வெளியீடு குறித்த கருத்தரங்கு கோவையில் நேற்று நடைபெற்றது.
கோவை: சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொது பங்கு வெளியீடு குறித்த கருத்தரங்கு கோவையில் நேற்று நடைபெற்றது.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), டை ( சர்வதேச தொழில் முனைவோர் அமைப்பு - கோவை கிளை ) மற்றும் ஐ.ஐ.எப் ( இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் பவுண்டரிமேன்) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், பங்குச்சந்தையில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, பட்டியிலிடுவது உள்ளிட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

கருத்தரங்கில் டை அமைப்பின் தலைவர் ஜி.கார்த்திகேயன் பேசுகையில், "கோவை மண்டலத்தில் உள்ள பல சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியிலிட தகுதி வாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளன. இதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கவும், பங்குச்சந்தை பற்றிய தவறான எண்ணங்களை மாற்றவும் இது போன்ற கருத்தரங்குகள் அவசியம்.’’ என்றார்.
தேசிய பங்குச்சந்தையின் தலைவர் ரச்னா பூஜாரி பேசுகையில், "தேசிய பங்குச்சந்தையில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலிடப்படுவது, மற்ற பட்டியலியிடுவதை விட சற்று மாறுபட்டது. முதலீட்டாளர்களுக்கு இதில் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பங்குச்சந்தை வாயிலாக பல நிறுவனங்கள் தொழில் அபிவிருத்தி செய்ய நிதி திரட்ட முடியும். பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் வட்டிச்சலுகை உண்டு. கடந்த ஆண்டு 165 நிறுவனஙகள் புதியதாக பட்டியிடப்பட்டுள்ளன. கோவையில் உள்ள சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள், பங்கு வெளியீட தேசிய பங்குச் சந்தை உதவும்." என்றார்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), டை ( சர்வதேச தொழில் முனைவோர் அமைப்பு - கோவை கிளை ) மற்றும் ஐ.ஐ.எப் ( இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் பவுண்டரிமேன்) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், பங்குச்சந்தையில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, பட்டியிலிடுவது உள்ளிட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

கருத்தரங்கில் டை அமைப்பின் தலைவர் ஜி.கார்த்திகேயன் பேசுகையில், "கோவை மண்டலத்தில் உள்ள பல சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியிலிட தகுதி வாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளன. இதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கவும், பங்குச்சந்தை பற்றிய தவறான எண்ணங்களை மாற்றவும் இது போன்ற கருத்தரங்குகள் அவசியம்.’’ என்றார்.
தேசிய பங்குச்சந்தையின் தலைவர் ரச்னா பூஜாரி பேசுகையில், "தேசிய பங்குச்சந்தையில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலிடப்படுவது, மற்ற பட்டியலியிடுவதை விட சற்று மாறுபட்டது. முதலீட்டாளர்களுக்கு இதில் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பங்குச்சந்தை வாயிலாக பல நிறுவனங்கள் தொழில் அபிவிருத்தி செய்ய நிதி திரட்ட முடியும். பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் வட்டிச்சலுகை உண்டு. கடந்த ஆண்டு 165 நிறுவனஙகள் புதியதாக பட்டியிடப்பட்டுள்ளன. கோவையில் உள்ள சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள், பங்கு வெளியீட தேசிய பங்குச் சந்தை உதவும்." என்றார்.