கோவையில் சி.ஐ.ஐ., டை மற்றும் ஐ.ஐ.எப்., அமைப்புகள் நடத்திய பொது பங்கு வெளியீடு கருத்தரங்கு

கோவை: சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொது பங்கு வெளியீடு குறித்த கருத்தரங்கு கோவையில் நேற்று நடைபெற்றது.

கோவை: சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொது பங்கு வெளியீடு குறித்த கருத்தரங்கு கோவையில் நேற்று நடைபெற்றது.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), டை ( சர்வதேச தொழில் முனைவோர் அமைப்பு - கோவை கிளை ) மற்றும் ஐ.ஐ.எப் ( இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் பவுண்டரிமேன்) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், பங்குச்சந்தையில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, பட்டியிலிடுவது உள்ளிட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டன.



கருத்தரங்கில் டை அமைப்பின் தலைவர் ஜி.கார்த்திகேயன் பேசுகையில், "கோவை மண்டலத்தில் உள்ள பல சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியிலிட தகுதி வாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளன. இதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கவும், பங்குச்சந்தை பற்றிய தவறான எண்ணங்களை மாற்றவும் இது போன்ற கருத்தரங்குகள் அவசியம்.’’ என்றார்.

தேசிய பங்குச்சந்தையின் தலைவர் ரச்னா பூஜாரி பேசுகையில், "தேசிய பங்குச்சந்தையில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலிடப்படுவது, மற்ற பட்டியலியிடுவதை விட சற்று மாறுபட்டது. முதலீட்டாளர்களுக்கு இதில் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பங்குச்சந்தை வாயிலாக பல நிறுவனங்கள் தொழில் அபிவிருத்தி செய்ய நிதி திரட்ட முடியும். பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் வட்டிச்சலுகை உண்டு. கடந்த ஆண்டு 165 நிறுவனஙகள் புதியதாக பட்டியிடப்பட்டுள்ளன. கோவையில் உள்ள சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள், பங்கு வெளியீட தேசிய பங்குச் சந்தை உதவும்." என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...