நீலகிரி: உதகை காந்தி மைதானத்தில் குவியும் குப்பைகளால் அங்கு செல்லும் விளையாட்டு வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நீலகிரி: உதகை காந்தி மைதானத்தில் குவியும் குப்பைகளால் அங்கு செல்லும் விளையாட்டு வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சொந்தமான பள்ளி விளையாட்டு மைதானம் ஏ.டி.சி.,யில் உள்ளது. இந்த மைதானத்தை பல பள்ளிகளின் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் இந்த மைதானம் சீரமைக்கப்பட்டு, புதிய 'கேட்' அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோடை சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த மைதானத்தை 'பார்க்கிங்' தளமாக மாற்றியதால், குண்டும் குழியுமாக மாறியது.
தற்போது, கோடப்பமந்து கால்வாயில் அகற்றப்பட்ட சகதிகள் இந்த மைதானத்தில் ஆங்காங்கே கொட்டப்பட்டு, திறந்த வெளி கழிப்பிடமாகவும், குப்பை மேடாகவும் மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும், இரவில் இங்கு தங்கும் மக்களாலும், இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் பயிற்சி மேற்கொள்ள வரும் விளையாட்டு வீரர்கள் இந்த மைதானத்தின் அவல நிலையைப் பார்த்து வேதனை அடைந்துள்ளனர்.
இந்த மைதானத்தை உடனடியாக தூய்மைப்படுத்தி முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சொந்தமான பள்ளி விளையாட்டு மைதானம் ஏ.டி.சி.,யில் உள்ளது. இந்த மைதானத்தை பல பள்ளிகளின் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் இந்த மைதானம் சீரமைக்கப்பட்டு, புதிய 'கேட்' அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோடை சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த மைதானத்தை 'பார்க்கிங்' தளமாக மாற்றியதால், குண்டும் குழியுமாக மாறியது.
தற்போது, கோடப்பமந்து கால்வாயில் அகற்றப்பட்ட சகதிகள் இந்த மைதானத்தில் ஆங்காங்கே கொட்டப்பட்டு, திறந்த வெளி கழிப்பிடமாகவும், குப்பை மேடாகவும் மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும், இரவில் இங்கு தங்கும் மக்களாலும், இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் பயிற்சி மேற்கொள்ள வரும் விளையாட்டு வீரர்கள் இந்த மைதானத்தின் அவல நிலையைப் பார்த்து வேதனை அடைந்துள்ளனர்.
இந்த மைதானத்தை உடனடியாக தூய்மைப்படுத்தி முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.